அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி கேத்தே பெர்ரி. ஐ.பி.எல். தொடக்க விழாவில் பங்கேற்று சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தாஜ் ஓட்டலில் தங்கி இருந்த அவர் கிரிக்கெட் வீரர் தெண்டுல்கரை சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் கேத்தே பெர்ரி கூறியிருப்பதாவது:-
தெண்டுல்கரை சந்தித்தது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அவர் உலகின் தலைசிறந்த கிரிகெட் வீரர்களில் ஒருவர் ஆவார். அவருடன் இணைந்து போட்டோ எடுத்துக்கொண்டது மகிழ்ச்சியான தருணமாகும்.
இந்த மகிழ்ச்சியை என் குடும்பத்தினருடனும் எனது நண்பர்களுடனும் போன் மூலமாக பகிர்ந்து கொண்டேன். ஐ.பி.எல். தொடர் சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலகின் சிறந்த வீரர் தெண்டுல்கர்-கேத்தே பெர்ரி
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து போராட்டம்
ஐ.பி.எல்.லின் அனைத்து போட்டிகளிலும் சச்சின் விளையாடுவார்: மும்பை இந்தியன்ஸ் அணி
பொல்லார்ட் 70 பந்தில் 102 ரன்: வெஸ்ட்இண்டீஸ் 42 ரன்னில் வெற்றி- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது
ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செயிண்ட் லுசிகாவில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன் குவித்தது.
பொல்லார்ட் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 70 பந்தில் 102 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரியும், 8 சிக்சரும் அடங்கும். ரஸ்சல் 34 ரன்னும், கேப்டன் டாரன் சேமி 31 ரன்னும் எடுத்தனர். பெர்ட்லீ, வாட்சன், டோகர்ட்டி தலா 2 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 46.3 ஓவரில் 252 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 42 ரன்னில் வெற்றி பெற்றது. பெர்ட்லீ அதிகபட்சமாக 48 பந்தில் 59 ரன்னும் (5 சிக்சர், 5 பவுண்டரி), டேவிட் ஹஸ்சி 57 ரன்னும் எடுத்தனர்.
கேமர் ரோச், பிராவோ, டாரன்சேமி, ரஸ்சல் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் வெஸ்ட்இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 64 ரன்னிலும், 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
3-வது ஆட்டம் டை ஆனது. இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (25-ந்தேதி) நடக்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக்கத்தில் நாளை டிக்கெட் விற்பனை
5-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை நடக்கிறது. இந்தப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 9 அணிகள் பங்கேற்கின்றன.
சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத், ஜெய்ப்பூர், தர்மசாலா, புனே, விசாகப்பட்டணம், மொகாலி, கட்டாக் ஆகிய நகரங்களில் போட்டி நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 10 ஆட்டம் நடக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் 7 லீக் ஆட்டமும், தகுதி சுற்று (2) ஆட்டமும், இறுதிப் போட்டியும் நடக்கிறது. ஏப்ரல் 4-ந்தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப் போட்டி தொடங்குகிறது.
இந்தப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நாளை (25-ந்தேதி) தொடங்குகிறது. காலை 11.30 மணி முதல் 5.30 மணி வரை டிக்கெட் விற்பனை நடைபெறும். 26-ந்தேதியும் டிக்கெட் விற்பனை நடைபெறும். காலை 9 மணி முதல் 5.30 மணி வரை டிக்கெட்டுகள் விற்கப்படும். மதியம் 1 மணி முதல் 2 மணி வரை மதிய உணவு இடைவேளைக்காக டிக்கெட்டுகள் வழங்கப்பட மாட்டாது.
இந்தப் போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.700 ஆகும். இது ஏ,பி,சி ஸ்டாண்டுகளின் கீழ்பகுதி ஆகும். அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.15,000 (பாக்ஸ் டி) ஆகும். ரூ.1,200 (ஏ.பி.சி மேல் பகுதி), ரூ.3,000 (டி3, எம்.சி.சி), ரூ.5,000 (பெவிலியன் டெரஸ்), ரூ.7,000 (அண்ணா பெவிலியன்), ரூ.8 ஆயிரம் (ஏ மற்றும் பி பாக்ஸ்) ஆகிய விலைகளிலும் டிக்கெட்டுகள் விற்கப்படும். www.chennaisuperkings.com என்ற இணைய தளத்திலும் டிக்கெட்டுகள் கிடைக்கும்.
ஐ.பி.எல். போட்டியின் தொடக்க விழா ஏப்ரல் 3-ந்தேதி ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கிறது.
ஐ.பி.எல்: யுவராஜுக்கு பதிலாக புனே வாரியர்சின் கேப்டன் ஆகிறார் கங்குலி
தடகள வீரர் உசைன் போல்ட் நடித்துள்ள ஒலிம்பிக் விளம்பர படத்திற்கு பெரும் வரவேற்பு